கல்கத்தா
அடுத்த மாதம் இத்தாலிநாட்டின் ரோமில் நடக்கவுள்ள உலக அமைதி மாநாட்டில் போப் பிரான்சிஸ், எக்குமினிக்கல் பேட்ரியார்ச் பர்தலோமிவ் மற்றும் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் ஆகியோருடன் பங்கேற்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைக்கப்பட்டார்.
ரோமில் நடக்கவுள்ள உலக அமைதி மாநாட்டில் பங்கேற்க தனக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்ததாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார்.
இம்மாநாட்டில் கலந்துகொள்ள எனக்கு இத்தாலி சிறப்பு அனுமதி அளித்தது. ஆனால் ஒன்றிய அரசு இதற்கு அனுமதி மறுத்தது.
திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் தேபாங்சு பட்டாச்சார்யா தேவ் வெளியிட்ட இது குறித்த ட்வீட்டில், ஏற்கனவே ஒன்றிய அரசு மம்தா பானர்ஜியின் சீனா பயணத்தின் அனுமதியையும் ரத்து செய்தது.
சர்வதேச உறவுகள் மற்றும் இந்தியாவின் நலன்களை மனதில் கொண்டு அந்த முடிவை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். இப்போது ஏன் இத்தாலிக்கும் அனுமதி மறுக்கிறீர்கள் மோடி ஜி?” என கேள்வி எழுப்பினார். இந்த விவகாரம் குறித்து ஒன்றிய அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.