கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அனைத்து சாலைகளிலும் சிறப்பு மருத்துவ குழு நிறுத்தவும் , சாலை மார்க்கமாக வருகிறவர்களுக்கு உடன டியாக பரிசோதனை செய்யவும் , நிபாவைரஸ் அறிகுறி இருந்தால் தனி மைப்படுத்தவும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார் .
நிபா வைரஸ் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் 23 க்கும் மேற்பட்டவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது . இதில் நிபா வைரஸ் பாதிப்புக்கு ஆளான 12 வயது சிறுவன் உயிரிழந்து உள்ளான் . இதையடுத்து தமிழ கத்துக்கு ‘ நிபா ‘ வைரஸ் பரவு வதை தடுக்கும் விதமாக பல்வேறு சிறப்பு நடவடிக்கை களை தமிழக அரசு எடுத்து வருகிறது . ‘
நிபா’வைரஸ் பாதிப்பு அறிகுறி உள்ளவர்களுக்கு செய்யப்பட வேண்டிய பரிசோதனை குறித்தும் , தேவையான தடுப்பு நடவடிக்கை குறித்தும் அனைத்து மாவட்டத்துணை பொது சுகாதார இயக்குனர்களுக்கு , பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது வவ்வால்கள் மூலம் ‘ நிபா ‘ வைரஸ் பாதிப்பு மனிதர்களுக்கு ஏற்படுகிறது .
மேலும் உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது . தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் நிபா ‘ வைரசால் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளாவை இணைக்கும் அனைத்து சாலைகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சிறப்பு மருத்துவ குழு கண்காணிப்பு பணியில் இருக்க வேண்டும் .