தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி செல்கிறது. கொரோனா இரண்டாவது அலை புதுச்சேரியில் கோரத்தாண்டவம் ஆடி வருவதால், பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் இன்று புதிதாக 2,049 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 30 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 75,024 ஆகவும், உயிரிழப்பு 1,018 ஆகவும் உயர்ந்துள்ளது. இதுவரை 59,177 பேர் குணமடைந்துள்ளனர்
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.