தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
புது டெல்லி:
பெண் போலீஸ் அதிகாரிகள் எண்ணிக்கை குறித்து காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள ஒன்றிய அரசு, அனைத்து காவல் நிலையங்களிலும் கூடுதல் பெண் காவலர்கள் நியமிக்க ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்ததுள்ளதாகவும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் 3 பெண் உதவி ஆய்வாளர்கள் 10 பெண் காவலர்கள் நியமிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது.
மேலும் பெண் காவலர்கள் கூடுதலாக நியமித்து காலியாக உள்ள ஆண் காவலர்கள் பணியிடங்களில் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. கூடுதல் பெண் காவலர்கள் மூலம் காவல் நிலையத்தில் 24 மணி நேரமும் பெண்களுக்கான உதவி மையத்தை செயல்படுத்தலாம் என்றும் ஒன்றிய அரசின் உள்துறை பதில் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.