டெல்லி:-
அடிக்கடி செய்திகளின் வாயிலாக இந்தியாவை தாக்கும் என்ற பெயரில் தங்களைத் தாங்களே தாக்கிக் கொல்வது பாகிஸ்தானின் வழக்கம் அது போன்ற ஒரு சம்பவம் தான் தற்போது நிகழ்ந்துள்ளது.
சமீப காலமாக இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே காஷ்மீர் தொடர்பான உரசல்கள் அதிகரித்துவருகிறது சமீபத்தில்கூட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தேர்தலை நடத்துவதற்கு இந்தியா தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் ஜம்மு காஷ்மீர் பகுதியில் நிலவும் தட்பவெப்ப நிலை குறித்த செய்தியை வெளியிட்டிருந்தது. இதில் ஜம்மு, காஷ்மீர், லடாக், கில்கிட்-பல்டிஸ்தான் மற்றும் முசாபராபாத் நிலவும் தட்பவெப்ப நிலை குறித்து செய்தி வெளியிட்டிருந்தது. இவற்றில் கில்கிட்-பல்டிஸ்தான் மற்றும் முசாபராபாத் ஆகியவை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ளது.
இதன் மூலமாக இஸ்லாமாபாத் இருக்கு இந்தியா முக்கிய செய்தியை அறிவித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதினார்கள் இந்நிலையில் இதற்கு பதிலடி தரும் விதமாக பாகிஸ்தான் வெளியிட்ட செய்தி தான் தற்பொழுது கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது.
இந்தியா வெளியிட்ட செய்திக்கு பாகிஸ்தானின் தேசிய வானொலி ஒலிபரப்பு நிறுவனமான Pakistan Radio . இதை மறுக்கிறோம் ஏனெனில் லடாக் பகுதியின் அதிகபட்ச வெப்பநிலை -1° C செல்சியஸ் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை -4° டிகிரி செல்சியஸ் நிலவுவதாக தெரிவித்திருந்தது.
இதனை கண்ட நெட்டிசன்கள் காமன் சென்ஸ் செத்துவிட்டது (RIP commen sense) என்று ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.
மேலும் நீங்கள் எல்லாம் எங்கே அறிவியல் பாடம் படித்தீர்கள் என்று கிண்டல் செய்யத் துவங்கினார்கள்.