கதுவா:-
பாகிஸ்தானிலிருந்து சங்கேத செய்தியுடன் பறந்து வந்த உளவாளி புறாவை ஜம்மு-காஷ்மீரின் கதுவாவில் உள்ள கிராமத்தில் சர்வதேச எல்லைக்கோடு (Internstional Border) அருகே பாதுகாப்பு படையினர் பிடித்தனர்.
ஜம்மு-காஷ்மீரில் கதுவா (Kathua) மாவட்டத்தில் உள்ள ஹிராநகர் (Hiranagar) செக்டாரில் அமைந்துள்ள மான்யாரி (Manyari) கிராமத்தில் பாகிஸ்தான் பகுதியிலிருந்து புறா ஒன்று பறந்து வந்தது. இதைக்கண்ட கிராமத்தினர் அதை பிடித்தனர். சந்தேகமடைந்த கிராம மக்கள் புறாவை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து மாவட்ட மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் (Senior Supritendent Of Police) சைலேந்திர மிஸ்ரா கூறுகையில்:-
மான்யாரி கிராமத்தினர் பிடித்த அந்தப் புறாவின் ஐ அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் அந்த புறாவின் காலில் வளையம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. அதில் சில எண்கள் குறிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது அதை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம் என்றார்.