புதுச்சேரிக்கு புதிதாக ஒரு லட்சம் தடுப்பூசிகள் வாங்கப்பட்டுள்ளது என்று பாரதிதாசன் சிலைக்கு மாலை அணிவித்த பின்பு, ஆளுநர் தமிழிசை தெரிவித்தார். கொரோனா நோயாளிகளுக்கு Remdesivir தடுப்பூசி தேவைப்பட்டால் உடனடியாக வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி புதுச்சேரி பாரதி பூங்கா அருகில் உள்ள, அவரது சிலைக்கு ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, மே-1ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ள நிலையில் ஒரு லட்சம் தடுப்பூசி புதிதாக வாங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு லட்சம் தடுப்பூசி புதுச்சேரியில் கையிருப்பு உள்ளது என்றும், மேலும் 1000 ரெம்டெசிவிர் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா நோயாளிகளுக்கு Remdesivir தடுப்பூசி தேவைப்பட்டால் உடனடியாக வழங்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் இதுகுறித்து பரிந்துரைக்கும் போது அதன் தேவைப்பட்டால் மட்டுமே பரிந்துரைக்க வேண்டும். மருத்துவராக நான் இருப்பதால் தெரிவிக்கிறேன் என்றார். ஏனென்றால் மக்கள் மருந்துக்காக நீண்ட நேரம் நிற்பது கவலையளிப்பதாக தெரிவித்தார்.