இந்தியா

உலக செவிலியர் தினம்; வாழ்த்து தெரிவித்த ஆளுநர் தமிழிசை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுச்சேரியில் செவிலியர் தினத்தையோட்டி கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட செவிலியர்களுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை கிரிடம் அணிவித்து பாரட்டினார்.

உலக செவிலியர் தின விழா புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை சார்பில் கோரிமேட்டில் உள்ள அன்னை தெரசா மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது. விழாவுக்கு சுகாதாரத்துறை செயலர் அருண் தலைமை தாங்கினார். துணைநிலை ஆளுநர்  தமிழிசை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் செவிலியர்களுக்கு தலையில் கிரீடம் சூட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

ALSO READ  இந்தியன்-2 விபத்து … லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு

 
பின்னர் தமிழிசை பேசுகையில், கொரோனா போரில் முன்னெடுத்து செல்லும் செவிலியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  வரும் காலம் மருத்துவ உலகம் எப்படியிருக்க வேண்டும் என்பதை தெரிந்துகொண்டு செவிலியர்கள் செயல்பட வேண்டும்.  ஈடுபாட்டுடன் பணியை செய்யும் செவிலியர்கள் உங்கள் உடல் நலத்தையும் பேணி பாதுகாக்க வேண்டும் என்றார். 

ஒரு சில செவிலியர்கள் உடல்நிலை பாதிக்கப்படுவதை கேள்விப்படும்போது வருத்தமடைவதாகவும், உங்கள் உடல் நலத்தையும் கவனியுங்கள் என்றார்.  மேலும் முக கவசம் அணியாமல், தனிமனித கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் கொரோனா போரில் வெற்றி பெற முடியாது எனக் கூறினார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சலூன் கடைகள் அடைத்து போராட்டம்:

naveen santhakumar

6வது முறையாக மானியமில்லாத சிலிண்டர் விலை உயர்வு

Admin

மீண்டும் வருகிறது பப்ஜி விளையாட்டு!

Shanthi