போபால்:-
மத்திய பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டத்தில், அரிய வகை மஞ்சள் நிற தவளைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அம்கான் (Amgaon) என்ற கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் அரிய மஞ்சள் நிற தவளைகள் துள்ளி விளையாடும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள பாபா சாகிப் ஹார்டுவேர் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஆனந்த் பாண்டே கூறுகையில்:-
பொதுவாக இந்த வகை மஞ்சள் நிற தவறுகளை மும்பை மற்றும் புனேவின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காணலாம். அதேபோல் இந்த வகை மஞ்சள் தவளைகள் சாதாரணமாக மேற்குவங்க மாநிலம் ஹவுரா பகுதியில் காணலாம். பெரும்பாலும் இவை காடுகளிலேயே தான் காணப்படும் முதல்முறையாக வயல்வெளிகள் காணப்பட்டுள்ளது.
இவற்றின் அறிவியல் பெயர் ஹோப்லோப்ரோடெக்கஸ் டிக்ரினஸ் (Hoplobrotechus Tigerinus) ஆகும். இந்த வகை தவளைகள் பயிர்களை தாக்கி சேதம் விளைவிக்கக்கூடிய பூச்சிகளை அழிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.