சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு இனி முதல் இ-சேவை மூலம் காணிக்கை செலுத்த வசதி ஏற்படுத்தி திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில்தேவசம் போர்டு, தனலக் ஷ்மி வங்கியுடன் இணைந்து சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இணையதளம் மூலமாக காணிக்கை செலுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, கூகுள் பே உள்ளிட்ட செயலிகள் வழியாக பக்தர்கள் காணிக்கை செலுத்த முடியும்.
மேலும், இதற்காக சன்னிதானம், நிலக்கல், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 22 இடங்கில் க்யூஆர் கோடுகள் வைக்கப்பட்டுள்ளன. அதோடு பக்தர்கள் 94959 99919 என்ற எண் மூலம் கூகுள் பே வழியாக காணிக்கை செலுத்த முடியும்.
சபரிமலைக்கு செல்லும் பாதைகளில் பல்வேறு இடங்களில் காணிக்கை செலுத்த க்யூஆர் கோடு வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக திருவாங்கூர் தேவசம் போர்டு செயல் அதிகாரி வி.கிருஷ்ண குமார் வாரியர் தெரிவித்துள்ளார்.
5 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு முன் பதிவு தேவை இல்லை. 10 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு RTPCR சோதனை சான்றிதழ் தேவை இல்லை.
18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்கள் பள்ளி கல்லூரி அடையாள அட்டைகள் மூலம் ஆன்லைன் முன்பதிவு செய்யலாம். 10 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 72 மணிநேரத்துக்குள் RTPCR சோதனை செய்த நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்ட சான்றிதழ் கட்டாயம்.