இந்திய ரயில்வேயில் சரியாகச் செயல்படாத, ஊழல், முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்களை ரயில்வே துறை பணி நீக்கம் செய்து வரும் நிலையில், கடந்த 16 மாதங்களில் 177 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ரயில்வேயில் சரியாகச் செயல்படாத, ஊழல், முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்களை ரயில்வே துறை பணி நீக்கம் செய்து வரும் நிலையில், கடந்த 16 மாதங்களில் 177 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 139 அதிகாரிகளுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டும் 38 பேர் பணியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். வேலை செய்யாமல் வெறும் சம்பளம் வாங்குபவர்களுக்கு ரயில்வே துறையில் இடமில்லை என்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்விணி வைஷ்னவ் தெளிவுபடுத்தினார். அதன்படி பயிற்சி சேவைகள் விதி 56(ஜெ)ஐப் பயன்படுத்தி ஜூலை 2021 முதல் ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும், ஒரு ஊழல் அதிகாரி அல்லது செயலற்ற ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.