திருவனந்தபுரம்:-
மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. 5 மாதங்களுக்குப் பின் நாளை முதல் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால், சபரிமலையில் நாளை முதல் பக்தர்கள் தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளை முதல் 21ஆம் தேதி வரை வழக்கமான மாதாந்திர பூஜைகள் நடக்கவுள்ளன. 5 நாள் திறக்கப்படவுள்ள நிலையில், தினமும் முன்பதிவு செய்த 5,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.
பக்தர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்க வெண்டும். மேலும் 48 மணி நேரம் முன்னர் ஆர்டி-பிசிஆர் சோதனை செய்து கொண்டு கொரோனா தொற்றுக்கான நெகடிவ் சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.