தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:-
தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் ஜூலை 19-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை அறியலாம்.
மேலும் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.gov.in, www.dge2.tn.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை காணலாம் என தெரிவித்துள்ளது.
இதனிடையே கேரளாவில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 4.12 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். தற்போது விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்றதையடுத்து தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்டது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.