மல்லோர்கா:-
உலகம் முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஒட்டுமொத்த உலக நாடுகளும் முழு அளவிலான ஊரடங்கை பின்பற்றி வருகிறது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
நமது நாட்டிலோ முழு ஊரடங்கு உத்தரவை சற்றும் மதிக்காமல் மக்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகிறார்கள். பலரும் இருசக்கர வாகனங்கள், கார்கள் என உற்சாகமாக சுற்றி வருகின்றனர். இதையடுத்து போலீசாரும் இவர்களை வெளுத்து அனுப்புகிறார்கள்.
இந்நிலையில் ஸ்பெயின் நாட்டில் மல்லோர்கா (Mallorca) நகரில் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ள மக்களை மகிழ்விக்க ஸ்பெயின் நாட்டு போலீசார் கிட்டார் போன்ற இசைக்கருவிகளை வைத்து பாட்டு பாடி, டான்ஸ் ஆடி மக்களை மகிழ்வித்தனர்.
இந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.
உலகில் இத்தாலி மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ஸ்பெய்ன் திகழ்கிறது. இதுவரை 3400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் 48,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.