காபூல்:-
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் ஷோர் பஜார் பகுதியில் உள்ள குருத்வாராவில் இன்று காலை பயங்கர ஆயுதங்களுடன் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 27 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
இன்று காலை150க்கும் மேற்பட்டோர் சீக்கியர்கள் அந்த குருத்வாராவில் வழிபாடு மேற்கொண்டிருந்தனர், அங்கு திடீரென துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் நுழைந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர் பலரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்தனர்.
போலீசார் மற்றும் ராணுவத்தினர் விரைந்து சென்று எதிர் தாக்குதல் நடத்தி 80 பேரை மீட்டனர் இதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர் மீட்கப்பட்டவர்களில் 11 பேர் சிறுவர்கள் ஆவர்.
ஆப்கானிஸ்தானில் வெறும் 300 சீக்கிய குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகின்றது குறிப்பிடதக்கது.
மத்திய காபூலில் அமைந்துள்ள சீக்கிய குருத்வாரா மீதான தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளனர்.
காபூல் சீக்கிய குருத்வாரா மீதான தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவிஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
சிறுபான்மை சமூகத்தின் மத வழிபாட்டுத் தலங்கள் மீது இத்தகைய கோழைத்தனமான தாக்குதல்கள், குறிப்பாக கொரோனா தொற்று பரவிவரும் இந்த நேரத்தில், குற்றவாளிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் கொடூரமான மனநிலையை பிரதிபலிக்கிறது.
துணிச்சலான ஆப்கானிய பாதுகாப்புப் படைகளின் அர்பணிப்பும் மற்றும் ஆப்கானிய மக்களைப் பாதுகாப்பதற்கும் நாட்டைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் முன்மாதிரியான தைரியம் ஆகியவற்றை நாங்கள் பாராட்டுகிறோம். நாட்டிற்கு அமைதி மற்றும் பாதுகாப்பைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் இந்திய மக்கள், அரசு மற்றும் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப் படைகளுக்கு துணையாக நிற்போம் என கூறி உள்ளது.