சென்னை
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையமும் இணைந்து எலும்புதானம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி பட்டறையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
தடுப்பூசி போட்டுக் கொள்வது தவறான விசயம் அல்ல. தற்போது தமிழகத்தில் தற்போது 66 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது.
2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியவர்கள் 57 லட்சம் பேர் இருக்கின்றனர். இவர்களை கண்டறிந்து தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அரசு எடுத்த தடுப்பு நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரானா பாதிப்பு குறைந்துள்ளது. பாதிப்பு குறைந்துள்ளதால் 2வது தடுப்பூசி போடாமல் இருப்பது தவறு என்றும் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் இருப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்