திருவனந்தபுரம்:-
ரயில்களை இயக்குவதை காட்டிலும், அதன் பராமரிப்பு பணிகள் என்பது மிகுந்த சிரமமானது. ஆனால் அந்த பணியை கேரளாவில் கடந்த 3 ஆண்டுகளாக முழுவதும் பெண்களை மட்டுமே கொண்ட Pink Gang குழுவானது, வஞ்சிநாத் எக்ஸ்பிரஸ் ரயிலின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ரயில் நிலையத்தில் பணி புரிந்து வரும், இந்த பெண்கள் முழு ஈடுபாட்டுடன் செய்து வருகின்றனர். இந்த பெண்கள் குழுவில் தற்போது 16 பேர் ரயில் கோச் மெக்கானிக்கல் பிரிவில் பணியாற்றி வருகின்றனர்.
இந்தப் பெண் பேங்க் ஜனவரி 2017 ஆம் ஆண்டு C.C. ஜோய் (Senior Divisional Mechanical Engineer) ஆல் தொடங்கப்பட்டது
V.M.ஸ்ரீகலா (Jr. Engineer) என்பவர் இந்தப் பெண்கள் குழுவின் இன்சார்ஜ் ஆக உள்ளார்
இந்த ரயில் பராமரிப்பு பணியை தாங்கள் மகிழ்ச்சியாகவும், நம்பிக்கையுடனும் செய்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மேலும், ரயிலின் ஒவ்வொரு பகுதியையும் ஆய்வு செய்து, அதில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் உற்சாகமுடன் தெரிவிக்கின்றனர்.