தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கிய தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அண்மைக்காலமாக பல்வேறு அரசியல் தலைவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடந்த 19ஆம் தேதி கொரோனா உறுதியானது. இதனையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், தற்போது மன்மோகன் சிங் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார். இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.