கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவு பகலாக தொடர்ந்து பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமான கடிதம் ஒன்றை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நேற்றைய தினம் (வெள்ளி கிழமை) சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு தாம் சென்றுள்ளார்.
அப்பொழுது அங்கு பணியில் இருந்த மருத்துவர்களிடம் உங்களுக்கு ஏதாவது சிரமம் உள்ளதா?? என்று கேட்டுள்ளார்.
அதற்கு மருத்துவர்கள் சேவை செய்வதே எங்கள் பண்ணி அதை மனதார செய்கிறோம் என்று கூறி உள்ளனர்.
ஆனால் காற்று புக முடியாத முகக் கவசங்கள் அணிந்து உள்ளதால் தாகத்திற்கு தண்ணீர் குடிக்க சிரமமாக உள்ளது என்று கூறியுள்ளனர். இதனால் உணர்ச்சிவசப்பட்ட விஜயபாஸ்கர் தனது கண்களில் கண்ணீர் வந்ததாக இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இவர்களின் மகத்தான மருத்துவ சேவை கண்டு மலைத்துப் போனதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இவரின் இந்தக் கடிதம் வைரலாகி வருகிறது.