புதுடெல்லி:-
தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA ) இதுவரை ஆண்களை மட்டுமே நுழைவுத்தேர்வு எழுத அனுமதித்து வந்தது தற்போது பெண்களும் இந்த நுழைவுத் தேர்வு எழுதலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புது தில்லியைச் சேர்ந்த குஸ்கா என்பவர் பொதுநல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார். இதில் ராணுவத்திற்கு செல்ல நிறைய வழிகள் உள்ளன. அதில் ஒரு வழிதான் தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்வது ஆகும்.
இந்திய ராணுவத்தில் சராசரியாக 1840 அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் 270 பேர் இந்திய ராணுவ அகாடமி மூலம்தான் சேர்க்கப்படுகிறார்கள். மற்றவர்கள் அதிகாரிகள் பயிற்சி அகாடமி மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள்.இதில் ஆண்கள் மட்டுமே இதுவரை அனுமதித்து வருகின்றனர்.
உச்ச மன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் கொள்கை முடிவை மாற்றி பெண்களுக்கான சம உரிமையை தேசிய பாதுகாப்பு அகாடமி வழங்க வேண்டும் என்றும் தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களும் நுழைவுத் தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ளது.