உலகம்

குடியரசு தினவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:

இந்திய குடியரசு தினம் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் 26-ம் தேதி அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தின விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது வழக்கம்.

அந்த வகையில், இந்தியாவின் 72-வது குடியரசு தின விழா 2021 ஆம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும்படி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இந்திய பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார்.

ALSO READ  தேடப்படும் குற்றவாளியாக மாறிய பிச்சைக்காரன்...ஏன் தெரியுமா..

இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இங்கிலாந்து போரிஸ் ஜான்சன் இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக இங்கிலாந்து பிரதமர் ஜான்சன் வரும் ஜனவரி மாதம் இந்தியாவுக்கு வர உள்ளார் என இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாலியல் பலாத்கார முயற்சி – பெண்ணை காப்பாற்றிய கொரோனா வைரஸ்

Admin

அடுத்த ஷாக்: அமெரிக்காவில் அணிலுக்கு பிளேக் தொற்று…. 

naveen santhakumar

தாயை கொன்று உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட மகனுக்கு சிறை:

Shobika