இந்தியாவை விட்டு வெளியேறிய நித்தியானந்தா தனி தீவு அமைத்து விட்டதாக செய்திகள் வந்தது அனைவரும் அறிந்த ஒன்றே ,அதற்கு கைலாச நாடு என்றும் பெயர் சூட்டினார்.
குற்ற வழக்குகளில் அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடினாலும் அதனை பொருட்படுத்தாமல் ,அவ்வப்போது பல செய்திகளை வெளியிட்டு கொண்டுதான் இருக்கின்றார்.
மேலும் தனிநாடு இணையதளத்தில்,இந்து மதத்தை பின்பற்றும் எவரும் தனது கைலாச நாட்டின் குடிமகனாக ஆகலாம் என்று வெளிப்படையாகஅறிவித்திருந்தார்.அதுமட்டுமல்லாது, அந்நாட்டின் மக்கள் தொகை மக்கள் தொகை 10 கோடி பேர் என்று பலரையும் வியக்க வைக்கும் வகையில் நித்தியானந்தா குறிப்பிட்டிருந்தார் .
மேலும் அந்த நாட்டுக்கு என்று தனி பாஸ்போர்ட், மொழி போன்றவற்றை உருவாக்குவதாகும் குறிப்பிட்டிருந்தார். மேலும் அந்நாட்டின் பிரதமராக நித்தியானந்தா இருப்பார், என்றும் இந்தியாவைப் போல் உள்நாட்டு பாதுகாப்புத்துறை மற்றும் ராணுவத் துறை போன்றவற்றை அமைத்துள்ளார்.
பாஸ்போர்ட் இரு நிறங்களில் (தங்கம் மற்றும் சிவப்பு) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் கைலாச நாட்டில் ரிசர்வ் வங்கி தொடங்க இருப்பதாகவும் மற்றும் பணம் குறித்த முக்கிய அறிவிப்பு வருகிற விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்படும் என்றும் நித்யானந்தா கூறியுள்ளார்.
நாட்டிற்கு நன்கொடையாக அதிக அளவில் பணம் கிடைத்திருப்பதாகவும்,அதனை நல்ல காரியங்களுக்கு செலவிட வங்கி தொடங்குவதாகவும்,அத்துடன் சட்டத்திற்குப் புறம்பாக எதுவும் இருக்காது என்றும் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
300 பக்க பொருளாதாரக் கொள்கை தயார் செய்யப்பட்டு விட்டதாகவும் கைலாச நாட்டிற்கு என பணம் அச்சடிக்கபட்டு விட்டதாகவும் சாமியார் நித்யானந்தா