இந்தியா

பூ விற்கும் பெண்ணுக்கு ரூ.30 கோடி பரிசா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கர்நாடகாவில் பூ விற்கும் பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.30 கோடி பணம் பரிவத்தனை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கர்நாடகாவில் சன்னபட்னா பகுதியை சேர்ந்த மாலிக் புர்கானும்,அவருடைய மனைவி ராகியம்மாளும் அங்குள்ள சந்தையில் பூ விற்று வருகிறார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இவர்கள் வீட்டிற்கு வந்த வங்கி அதிகாரிகள் இருவரையும் வங்கிக்கு அழைத்து சென்றனர். என்ன நடந்தது என தெரியாமல் குழம்பி தவித்த தம்பதியினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

ALSO READ  லாட்டரியில் ஆதிவாசி தொழிலாளிக்கு ரூபாய் 12 கோடி பரிசு…

ராகியம்மாளின் வங்கிக்கணக்கில் திடீரென ரூ.30 கோடி பணம் வரவு வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து மாலிக் கூறுகையில், சமீபத்தில் ராகியம்மாள் ஆன்லைன் மூலம் சேலை வாங்கியதாகவும், அதற்கு பரிசு விழுந்ததாக கூறி வங்கிக்கணக்கை கேட்டதால் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரோடுரோலர் மூலம் ரூ .72 லட்சம் மதிப்புள்ள மதுபானத்தை அழித்த ஆந்திர அரசு… 

naveen santhakumar

பெய்ரூட்டை போலவே மும்பையில் 76 ஆண்டுகளுக்கு முன் நடந்த குண்டுவெடிப்பு…

naveen santhakumar

எந்த நேரத்திலும் இந்தியாவை தாக்கலாம் கொரோனா 3.0- இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை

naveen santhakumar