மகாராஷ்டிராவில் மராத்தி மொழியை கட்டாய பாடமாக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு 1 முதல் 7 வகுப்பு வரை மராத்தி மொழியை கட்டாய பாடமாக்க கொண்டு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான புதிய அரசு பதவியேற்றபின், தற்போது அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 10-ம் வகுப்பு வரை மராத்தியை கட்டாய பாடமாக்க முடிவு செய்துள்ளது.
இதுபற்றி அம்மாநில தொழிற்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் கூறும் போது, 1 முதல் 10ம் வகுப்பு வரை மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மராத்தியை கட்டாயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சட்டம் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
மராட்டியத்தின் மாநில மொழியை அனைவரும் கண்டிப்பாக கற்றாக வேண்டும் என மற்றொரு அமைச்சரான சாகன் புஜ்பால் தெரிவித்துள்ளார்.