வண்ணமயமான வாழ்க்கைக்கு வண்ணங்களுடன் தொடர்புபடுத்தி பின்பற்றப்படும் ஒரு வகையான மருத்துவ முறையே கலர் தெரபி ஆகும். நம்மை சூழ்ந்துள்ள பஞ்ச பூதங்களின் நிறங்கள் ஆகியவற்றைக் அடிப்படையாக கொண்டது கலர் தெரபி…
இத்தகைய கலர் தெரபி இயற்கை மருத்துவத்தில் புதிய யுக்தியாகவும் பார்க்கப்படுகிறது. இப்படி அளிக்கப்படும் இயற்கை மருத்துவத்தால் உடல் மட்டும் அல்லாது நம் எண்ணங்களும் மேன்மையடைய வாய்ப்புகள் உள்ளன. ஒவ்வொரு வண்ணமும் நம் மூளையைத் தூண்டும் ஆற்றல் கொண்டவை. எனவே இத்தகைய நிறசிகிச்சை கூடுதல் சிகிச்சை முறைகளில் ஒன்றாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இவற்றை நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு முறையில் அதிகம் கையாளப் படுகிறது.
ஞாயிறு – தக்காளி ஜூஸ்
திங்கள் – ஆப்பிள், முள்ளங்கி
செவ்வாய் – ஆரஞ்சு, கேரட்
புதன் – மூலிகைச்சாறு
வியாழன் – எலுமிச்சைச் சாறு
வெள்ளி – கொய்யா, வாழைப் பழம்
சனி – கறுப்பு திராட்சைச் சாறு
என்று தினமும் அந்தந்த நாளின் நிறத்தோடு ஒத்துப்போகும் நிறமுள்ள காய்கறி, பழங்களைச் சாப்பிடுவது கொடிய நோய்களைத் தடுக்க உதவும் என்கிறார்கள் நிபுணர்கள்.