தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஐந்தரை ஏக்கர் நிலத்தில் திருப்பதி ஏழுமலையானுக்கு கோயில் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குடும்பத்துடன் திருப்பதியில் உள்ள ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
அங்கு அவருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பூரண மரியாதை அளிக்கப்பட்டது. சுவாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
உளுந்தூர்பேட்டை அருகே ஏழுமலையான் கோவில் கட்டப்படும் என்று தெரிவித்தார். இதற்காக ஐந்தரை ஏக்கர் நிலம் பதிவு செய்யப்பட்டு திருப்பதி தேவஸ்தானத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.