டெல்லி சிஏஏ போராட்ட வன்முறை குறித்து மத்திய அரசை கண்டித்த நடிகர் ரஜினியை கமல் பாராட்டியுள்ளார்.
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் உளவுத்துறை அதிகாரி, தலைமை காவலர் உட்பட 24 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், டெல்லி வன்முறையில் மத்திய அரசை கடுமையாக கண்டித்தார். வன்முறை ஒடுக்காவிட்டால் எதிர்கால பிரச்சனையாக வெடிக்கும் எனவும், இது மத்திய அரசின் தோல்வியை காட்டுவதாகவும் அப்போது தெரிவித்தார்.
மத்திய அரசை கடுமையாக சாடிய நடிகர் ரஜினிகாந்தின் கருத்துகள் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் ரஜினிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கமல் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சபாஷ் நண்பர் ரஜினிகாந்த் அவர்களே, அப்படி வாங்க. இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை.வருக, வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.