தமிழகத்தில் இந்தாண்டு சட்ட மன்ற தேர்தல் நடக்கவுள்ளதை தொடர்ந்து ஆளும் கட்சி உட்பட பல காட்சிகள் தங்களின் பரப்புரைகளை தொடங்கியுள்ளனர். அதனால் தமிழக தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இன்னும் பிற காட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன.
தேர்தல் தேதியும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனையடுத்து சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று விடுதலையாகி தமிழகம் திரும்பியுள்ள சசிகலாவின் அரசியல் நடவடிக்கை எந்த மாதிரியாக இருக்கும் எனவும் அரசியல் விமசகர்கள் கூறிவரும் நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், ”அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து இந்தச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகுதான் அதிமுகவை மீட்டெடுப்போம்” என்றார்.
அமமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்கப் பேச்சுவார்த்தை நடத்துகிறதா என்ற கேள்விக்கு, ”அமமுக-பாஜக கூட்டணி குறித்து யாரும் பேசவில்லை என்றார். மேலும் ”சுதாகரனுக்கு அபராதத் தொகை செலுத்தப் பணம் இல்லை” ஏன தெரிவித்தார்.