தமிழகத்தில் இந்தாண்டு சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தங்களின் அனல் பறக்கும் பிரச்சாரங்களை தொடங்கியுள்ளனர். அந்தவகையில் ”உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற தலைப்பில் இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், திமுகவின் ஆட்சியை மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் கைகளில் சமர்பிப்போம் என்று கருணாநிதி உயிரோடு இருந்தபோது உறுதிமொழி எடுக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
அந்த உறுதிமொழி நிறைவேறும் காலம் நெருங்கி வருவதாக குறிப்பிட்ட அவர், திமுக ஆட்சிக்கான ஆதரவு மக்களிடையே வெளிப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த பத்தாண்டுகளில் தமிழகம் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது என அவர் கூறினார். மக்கள் கவலைகளை போக்கும் வகையில் வருகின்ற திமுக ஆட்சி செயல்படும் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.