அரசியல்

ராஜேந்திர பாலாஜி டெல்லியில் தலைமறைவு?… தட்டித்தூக்க விரைகிறது தனிப்படை!

Rajendra balaji
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி முன்னாள் அமைசர் ராஜேந்திர பாலாஜி ரூ. 3 கோடியே 10 லட்சம் வரை பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அதன்பேரில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் பலராமன், பாபுராஜ், முத்துப்பாண்டி ஆகியோர் மீது நவம்பர் 15-ந்தேதி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்தது.

ALSO READ  கள்ளக்குறிச்சி சம்பவம் - அரசின் உத்தரவை மீறிய பள்ளிகள்…

இதனையடுத்து 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ராஜேந்திர பாலாஜியை தீவிரமாக தேடி வருகின்றனர். ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிடாமல் இருப்பதற்காக விமான நிலையங்களுக்கு போலீசார் “லுக்-அவுட்” நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. ராஜேந்திர பாலாஜியை பிடிப்பதற்காக அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த உறவினர்கள் மற்றும் கட்சி பிரமுகர்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்த போலீசார், நேற்று ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமான அதிமுக நிர்வாகிகள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதிமுக நிர்வாகிகள் இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் தங்கியிருப்பதாக தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தனிப்படை போலீசார் ராஜேந்திர பாலாஜியை கைது செய்து அழைத்து வருவதற்காக டெல்லி விரைந்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழர் வீர விளையாட்டு பாதுகாப்பு நலச்சங்கம் சார்பாக அமைச்சர் தங்கமணியிடம் கோரிக்கை மனு

News Editor

ராகுல் காந்தியின் தமிழக வருகை தள்ளிவைப்பு!

News Editor

முதல்வன் படம் போன்று இலங்கையில் நடைப்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஊடகவியலாளர்

naveen santhakumar