காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யான ஏ.ஜி.எஸ். ராம்பாபு கொரோனா தொற்றால் இன்று மரணமடைந்த சம்பவம் அக்கட்சியினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
1989, 1991 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பிலும், 1996ம் ஆண்டு தமிழ் மாநில கட்சி சார்பிலும் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். 1998ஆம் ஆண்டு சுப்ரமணிய சுவாமிக்கு எதிராக போட்டியிட்ட இவர் தோல்வியை தழுவினார் . அதன்பிறகு ராம்பாபு தேர்தலில் போட்டியிடவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ராம்பாபுவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான இவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.