சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் எத்தனையே அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் அவரை உலக மக்களிடம் அறிமுகப்படுத்திய ஒரு அற்புதமான நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் பேசும் வரையிலும், மற்ற உலக நாடுகள் நம் பாரத தேசத்தைப் பற்றிய நினைத்திருந்த அபிப்பிராயம் வேறு மாதிரியானது. இந்தியா என்பது சாமியார்களும், படிக்காத காட்டுமிராண்டிகளும் நிறைந்த நாடு என்பதும் தான் அவர்களின் நம்பிக்கையாக இருந்தது.
சிகாகோ மாநாட்டில் மற்ற நாடுகளில் இருந்து வந்திருந்த ஆன்மிகவாதிகள் பேசி முடித்த பின்பு, கடைசியாக போனால் போகிறதென்று விவேகானந்தரையும் பேசச் சொன்னார்கள். அப்போது அவர் “சகோதர சகோதரிகளே” என்று ஆரம்பித்து தனது சொற்பொழிவை முடித்த பின்பும் கைத்தட்டல் அடங்க வெகு நேரமானது. சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவு ஆற்றிய பின்னர், அவர் எங்கு சென்றாலும் அவருக்கு மரியாதை அதிகரித்து தான் காணப்பட்டது.