2021 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. முதற்கட்டமாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மதுரையில் கடந்த 12 ஆம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
இந்நிலையில் நாளை (19/12/2020) சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையைத் தொடங்க உள்ளேன். நாட்கள் குறைவாக இருக்கின்ற காரணத்தினால் தேர்தல் பரப்புரையைத் தொடங்கவுள்ளேன்.
இன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “நாட்கள் குறைவாக இருக்கின்ற காரணத்தால் சட்டமன்ற தேர்தல் பரப்புரையை நாளை எடப்பாடி தொகுதியில் இருந்து தொடங்க உள்ளேன், என்றும் அதன் பிறகு அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பங்கேற்று பரப்புரையைத் தொடங்குகிறேன். அ.தி.மு.க.வை பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் தான் பா.ஜ.க. உள்ளது” என்றார். அறிவித்தார்.