தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
பெங்களூரு:
தனக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் கடவுளுக்கு கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது
கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. இதில் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் ஸ்ரீ ராமுலு என்பவர் சமீபத்தில் யாதகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள காடே துர்கா தேவி என்ற கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார். அப்போது, கடவுளுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், “தனக்கு துணை முதல்வர் பதவி வேண்டும்” என்று ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
கடவுளுக்கு கோரிக்கை விடுத்து அமைச்சர் எழுதிய இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.முன்பு எடியூரப்பா முதல்வராக பதவியேற்ற போது அமைச்சர் ஸ்ரீராமுலு தான் துணை முதலமைச்சர் ஆவார், என்று பரவலாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.