சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்ததை அடுத்து இன்று காலை சென்னை திநகர் இல்லத்திற்கு வந்தடைந்தார்.
நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் சசிகலா வருகை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ”அதிமுகவில் எந்த ஸ்லீப்பர் செல்லும் இல்லை. அனைவரும் ஒன்றாக உள்ளனர். ஆனால் அதிமுகவில் சில எட்டப்பன்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்” என்றார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் சென்னையில் தற்போது செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், ”அதிமுகவில் இன்னமும் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள். ஸ்லீப்பர் செல்கள் எம்.எல்.ஏவாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதிமுக நிர்வாகியாகக் கூட இருக்கலாம். அதிமுக பொதுக் குழுவைக் கூட்டவோ, கட்சியில் இருந்து ஒருவரை நீக்கவோ பொதுச்செயலாளருக்குத்தான் அதிகாரம் உள்ளது என தெரிவித்துள்ளார்.