அரசியல்

ஜனவரி-5 முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் தி.மு.க.தலைவர் ஸ்டாலின்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை: 

தி.மு.க.தலைவர் ஸ்டாலின், ஜனவரி-5-ம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாக அக்கட்சியின் முதன்மை செயலர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

இது தொடர்பாக நிருபர்களிடம் அவர்,”2021 சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ‛விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் ஜனவரி-5ல் தி.மு.க.தலைவர் ஸ்டாலின் பிரச்சாரத்தை துவங்குகிறார்.15 ஆயிரம் கி.மீ. பயணம் செய்து 1,500 கூட்டங்கள் நடத்தி 500 உள்ளூர் நிகழ்ச்சிகளை நடத்தும் அவர், சுமார் 10 லட்சம் மக்களை சந்திக்கும் வகையில் இந்த பயணம் அமையும். 

ALSO READ  அதிமுகவில் "ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கிறார்கள்"; டி.டி.வி தினகரன் பேட்டி!

இந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க., அரசு என்னென்ன செய்ய தவறியிருக்கிறது????.என்ன காரியங்களை தவறாக செய்திருக்கிறார்கள்????, தி.மு.க. கட்சியில் என்னென்ன திட்டங்கள், எப்படி செயல்படுத்தப்படும்??? என்பதை இந்த பயணங்களில் எடுத்து செல்வோம். பா.ஜ.க அரசின் திட்டங்களுக்கு அனுமதி தந்து மாநில உரிமைகளை விட்டு கொடுத்து சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்ட இந்த ஆட்சியை கலைக்கும் விதத்தில் இந்த பயணம் நடக்கும். 

இந்த பிரச்சாரம் 75 நாட்கள் நடக்கும்.இதில் 15 தலைவர்கள் பங்கேற்பார்கள்.முதலாவதாக திருக்குவளையில் தி.மு.க. இளைஞரணி செயலர் உதயநிதி பிரச்சாரத்தை தொடங்குகிறார். 29ம் தேதியில் இருந்து கனிமொழி பிரச்சாரத்தை தொடங்குகிறார்” என்று அவர் கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எடப்பாடி பழனிச்சாமி ஒரு அரசியல் சாணக்கியன்-புதிய நீதிக்கட்சி தலைவர் பேட்டி !

News Editor

நீங்க பேசுறதே தேவையில்லாத ஆணி தான்.. ரஜினியை கலாய்த்த அமைச்சர் ஜெயக்குமார்..

News Editor

இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் !

News Editor