சென்னை:
தமிழகத்தில் ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதற்காகவே, மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எல்லாம் ADMK ஆதரவு அளித்துள்ளதாக DMK தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் மத்திய அரசின் வேளாண் மசோதாவை, பா.ஜ.க.வின் கூட்டணி கட்சிகளே எதிர்க்கும் நிலையில் ADMK உள்ளிட்ட 4 கட்சிகள் மட்டுமே ஆதரவு அளிக்கின்றன. இந்த மசோதா, மாநிலங்களுக்கு உள்ளே நடக்கும் வர்த்தகத்தை கட்டுப்படுத்துகிறது. “சட்டத்திற்கு லோக்சபாவில் ஆதரவு, ராஜ்யசபாவில் எதிர்ப்பு” என்ற அ.தி.மு.கவின் நிலை நகைச்சுவைக்குரியதாக உள்ளது.
வேளாண் மசோதாக்கள் கார்ப்பரேட் நிறுவனங்களை மட்டும் தான் பாதுகாக்குமே தவிர விவசாயிகளை ஒருபோதும் பாதுகாக்காது. மாநிலங்களுக்கு உள்ளாக நடக்கும் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும். உழவர் சந்தை, வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் போன்ற அனைத்திற்கும் இந்த வேளாண் மசோதாக்கள் ஆபத்தானவையே.
மேலும், தமிழகத்தில் ஆட்சியில் நீடிப்பதற்காகவே வேளாண் மசோதாக்களுக்கு அதிமுக ஆதரவு அளிக்கிறது,என்று ஸ்டாலின் வசைபாடியுள்ளார்.