அரசியல்

டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகத்தில் புகுந்து பாமகவினர் அத்துமீறல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பா.ம.க., மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தொடர்ச்சியாக பாராளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை என விமர்சனம் உள்ளது. இந்த நிலையில்
சமீபத்தில் குடியுரிமை சட்ட வாக்கெடுப்பின்போது தனது வாக்கை அரசுக்கு ஆதரவாக பதிவு செய்தார், அதுவே விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்நிலையில் சமீபத்தில் பாராளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் கலந்து கொண்ட உறுப்பினர்களில் வருகை குறித்த தகவல் வெளியானது. இதில் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் மிக குறைவான அளவில் 15% மட்டுமே அட்டெண்ட்டன்ஸ் இருந்ததாக தகவல் வெளியானது. இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது. ஆத்திரமடைந்த பா.ம.க.,வினர் வினோபா தலைமையில் டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டு அங்குள்ள ஊழியர்களை செய்தியாளர்களை மிரட்டி பொருட்களை வாரி இறைத்து உள்ளனர்.

செய்தி வெளியிடும் ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை அலுவலகத்தின் உள்ளே புகுந்து மிரட்டுவதும், தாக்க முயல்வதும் இவர்கள் மக்களுக்கு எந்த நியாயத்தை சொல்ல வருகிறார்கள் என்பது கேள்விக் குறியாக உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.


Share
ALSO READ  தமிழகத்தில் இன்னும் 3 மாதத்தில் திமுக ஆட்சி அமைக்கும்; மு.க ஸ்டாலின் பரப்புரை!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பா.ம.க.வால் எங்களுக்கு எந்த வித பயனும் இல்லை: அதிமுக …!

naveen santhakumar

தேர்தல் முடிவு; பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் பின்னடைவு !

News Editor

கலைஞரின் நிழலாக இருந்த சண்முகநாதன் காலமானார்!

naveen santhakumar