தமிழகம், அசாம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (2.5.2021) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பிறகு இ.வி.எம் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி 89 சட்டமன்ற தொகுதிகளிலும் ,ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 128 சட்டமன்ற தொகுதிகளிலும், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கூட்டண 1 சட்டமன்ற தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நேரம் வரை சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும், தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம் கட்சியும் எந்த தொகுதிகளிலும் முன்னிலையில் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் 2,283 வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார். இவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட தங்கபாண்டியன் 4,192 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
அதே போல சேலம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிகளில் பழனிசாமி 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்., கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.