அரசியல்

தேர்தல் முடிவு; பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் பின்னடைவு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகம், அசாம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (2.5.2021) காலை  8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பிறகு இ.வி.எம் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 

ALSO READ  உலகில் 10.54 கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு !

தற்போதைய நிலவரப்படி எடப்பாடி பழனிசாமி  தலைமையிலான அதிமுக கூட்டணி 89 சட்டமன்ற தொகுதிகளிலும்  ,ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 128 சட்டமன்ற தொகுதிகளிலும், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கூட்டண 1 சட்டமன்ற தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.

இந்நேரம் வரை சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும், தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம் கட்சியும் எந்த தொகுதிகளிலும் முன்னிலையில் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் 2,283 வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார். இவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட தங்கபாண்டியன் 4,192 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

அதே போல சேலம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிகளில் பழனிசாமி 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்., கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சமூக ஊடகங்களிலிருந்து வெளியேற போவதாக பிரதமர் மோடி அறிவிப்பு…

naveen santhakumar

ஆயிரம் விளக்கில் தோசை சுட்ட குஷ்பு !

News Editor

தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் வரும் 9ம் தேதி வரை நடத்த முடிவு

Admin