தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரை பட்ஜெட் உரையை புறக்கணித்து சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தலைமையிலான அரசு இன்று பட்ஜெட் தாக்கல் செய்தது,இந்நிலையில், அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக காகிதமில்லா இ- பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2021-2022க்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராகன் தாக்கல் செய்தார்.
கலைவாணர் அரங்கில் இ – பட்ஜெட்டை கணினி திரை, TAB மூலம் எம்எல்ஏக்கள் பார்த்து வருகின்றனர். இதனிடையே பட்ஜெட் உரையை துவங்குவதற்கு முன்பே பேச வாய்ப்பு கேட்டு அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அமளிக்கு இடையே பட்ஜெட்டை தாக்கல் செய்து பழனிவேல் தியாகராஜன் தனது உரையை தொடங்கினார். ஆனால் பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.