விளையாட்டு

ஃபுட்பால் விளையாடியது தப்பா… இங்கிலாந்து வீரருக்கு நேர்ந்த கதி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ரோர் பெர்ன்ஸ் பயிற்சியின்போது ஃபுட்பால் விளையாடியதால் தற்போது நான்கு மாதம் கிரிக்கெட் விளையாட முடியாமல் போய்விட்டது.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி கடந்த 3ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி பெற்றதால் இரு அணிகளும் தலா 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

இரண்டாவது போட்டி தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். பயிற்சியின்போது ஃபுட்பால், வாலிபால் போன்ற விளையாட்டுகள் விளையாடுவது வழக்கம். இதில் ஃபுட்பால் விளையாடியபோது இங்கிலாந்து அணியின் ரோர் பெர்ன்ஸ்- க்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

ALSO READ  2வது டி20 போட்டி … தொடரை கைப்பற்றும் முனைப்பில் தென்னாப்பிரிக்கா…

இந்நிலையில் அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியதால் நான்கு மாதங்களுக்கு அவரால் கிரிக்கெட் விளையாட முடியாது. இங்கிலாந்து அணி அடுத்ததாக டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதில் ரோர் பெர்ன்ஸ் இடம் பெறமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

ரோர் பெர்ன்ஸ்க்கு ஏற்பட்ட காயத்தை தொடர்ந்து இங்கிலாந்து வீரர்கள் பயிற்சியின்போது புட்பால் விளையாடும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சேலத்தில் ஐபிஎல்: தோனி பங்கேற்பது உறுதி

Admin

இந்திய கிரிக்கெட் வீரர் சாஹலுக்கு கொரோனா தொற்று ..!!

naveen santhakumar

இரண்டாவது முறையும் இப்படியா?… எப்படியிருக்கிறார் கங்குலி!

naveen santhakumar