இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனைத் தொடர்ந்து இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா 10 ரன்களில் ஆட்டமிழக்க, மற்றொரு வீரரான தவான், கேஎல் ராகுலுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். இதனால் அணியின் ரன்கள் சீரான வேகத்தில் உயர்ந்தது. அணியின் ஸ்கோர் 134 ஆக இருக்கும்போது கேஎல் ராகுல் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்த 30 ரன்களை எடுப்பதற்குள் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 255 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ், ரிச்சர்ட்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பின்ச் ஆகியோர் அபார சதத்தால் விளையாடி விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கான 258 ரன்களை 39 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி அடைந்தனர் .
இதன்மூலம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 17-ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறுகிறது.