நியூசிலாந்து அணியுடனான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஆக்லாந்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் இந்திய அணி துல்லியமான பந்துவீச்சால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. ரன் எடுக்க முடியாமல் திணறியது.
அந்த அணியின் மார்டின் குப்தில் 33 ரன்களும், டிம் செய்ஃபெர்ட் 33 ரன்களும் எடுக்க 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் இந்த போட்டியிலும் ரோகித் சர்மா 8 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.
கேப்டன் விராட் கோலி 11 ரன்களில் வெளியேற இதனை தொடர்ந்து கே.எல்.ராகுல்(57 ரன்கள்),ஷ்ரேயாஸ் ஐயர்(44 ரன்கள்) எடுக்க 17.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
3வது டி20 போட்டி வரும் ஜனவரி 29ம் தேதி நடைபெறவுள்ளது.