டெஸ்ட் போட்டிகள் மீதான ரசிகர்களின் ஆவலை அதிகரிக்கும் வகையில் ஆஸ்திரேலியாவில் ரசிகர்களுக்கு நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது.
மூன்று வடிவங்களில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டிகளை பல நேரம் கொளுத்தும் வெயிலில் ரசிகர்கள் கிரிக்கெட் பார்க்கின்றனர். கடும் வெயிலால் சோர்வடையும் அவர்கள், டெஸ்ட் போட்டியை நேரில் சென்று பார்க்க தவிர்க்கின்றனர். இதனால் நாளுக்குநாள் டெஸ்ட் போட்டிகள் மீதான ஆர்வம் குறைந்து வருகிறது.
இதனை போக்கும் வகையில் வித்தியாசமான யோசனையை ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பெய்ன் கிரிக்கெட் மைதான நிர்வாகம் எடுத்துள்ளது. அதன்படி பிரிஸ்பெய்ன் கிரிக்கெட் மைதானத்தில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது.இதனால் ரசிகர்கள் நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டோ அல்லது அமர்ந்து கொண்டோ கிரிக்கெட் போட்டியை பார்க்கலாம். தற்போது பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் முதல் டெஸ்ட் போட்டியை ரசிகர்கள் நீச்சல் குளத்தில் அமர்ந்து பார்த்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதில் குளிக்க இந்திய மதிப்பில் சுமார் 17 ஆயிரம் கட்டணமாக இதற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.