தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
ஐபிஎல் போட்டிகளில் விளையாடவுள்ள பெங்களூர் அணியின் லோகோ மாற்றப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தொடங்கியதில் இருந்து விளையாடும் அணிகளில் ஒன்று பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் தற்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தலைமையில் ஆட உள்ளது.
இந்த அணியில் உலக அணிகளின் முன்னணி வீரர்கள் இடம் பெற்ற போதிலும் ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை என்பது வரலாறு.
இந்நிலையில் நேற்று முன்தினம் சமூக வலைத்தளங்களில் இருந்து ஆர்சிபி அணியின் லோகோ நீக்கப்பட்டது. இதுகுறித்து முன்னறிவிப்பு ஏதும் செய்யப்படாததால் அந்த அணி வீரர்களும், ரசிகர்களும் குழப்பமடைந்தனர்.
இதற்கிடையில் ஆர்சிபி அணியின் புதிய லோகோவை அணி நிர்வாகம் இன்று வெலியிட்டுள்ளது.RCB அணிக்கு கெட்டப் மாறிடுச்சு..அதனால் இந்த முறையாவது கோப்பையை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.