சென்னை விமான நிலையத்தில் 5 திரையரங்குகளை அமைக்க பிவிஆர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் தினசரி பல்லாயிரக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர். சில சமயம் விமானத்தில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறு, விமானத்தின் தாமதம் ஆகியவை காரணமாக பயணிகள் பல மணி நேரம் காக்க வைக்கப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
அந்த சமயத்தில் பயணிகள் தங்களது நேரத்தை செலவழிக்கும் வகையில் வாகனத்தின் உள்ளே அறிந்து திரையரங்குகளை அணைக்க பிரபல நிறுவனமான பிவிஆர் திட்டமிட்டுள்ளது.
சுமார் ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய அளவில் 5 திரையரங்குகளை அமைக்கப் போவதாகவும், வழக்கமாக திரையரங்கில் உள்ள அனைத்து வசதிகளும் இதில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிவிஆர் நிறுவனம் இந்தியா முழுவதும் 50 நகரங்களில் 584 திரையரங்குகளை கொண்டுள்ளது. தற்போது அதனை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.