கிருஷ்ணகிரி:-
கிருஷ்ணகிரியில் 67 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அம்மாவட்ட ஆட்சியர் ஜெய சந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் கருப்பு பூஞ்சை பாதிப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அளித்துள்ள தகவலின் படி,
இதுவரை மொத்தம் 67 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த 67 பேரில் 42 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின் கருப்பு பூஞ்சை தாக்குதலுக்கு உள்ளவர்கள்.
கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட 67 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். வேப்பனப்பள்ளி அருகே தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனிடையே, கொரோனா 3-ம் அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைகளுக்கு 100 படுக்கைகள் தயாராக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.