சென்னை:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் மாநில அளவிலான துறை சார்ந்த வளர்ச்சித் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் தொடர்பாக மாவட்டங்கள் தோறும் கள ஆய்வுகளை மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை அனைவரும் பெறும் வகையில் பணியாற்றிட தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார் எனவும், தற்போது கொரோனா கட்டுக்குள் வந்திருப்பதால் பணிகளை விரைவுபடுத்துமாறும் அலுவலர்களுக்கு அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து மாநிலம் முழுவதும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்றும், அடுத்த ஆய்வின்போது சரிவர பணிகளை மேற்கொள்ளாத அலுவலர்கள் மீது துறை வாரியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தாட்கோ சம்பந்தமான குறைகளைத் தெரிவிக்க நான்கு மண்டல அலைபேசி எண்களைத் தொடர்புக்கொள்ளலாம். மண்டல கட்டுப்பாட்டு அறைகள் எண்கள்: சென்னை – 7448828476, கோவை – 9445029498, திருச்சி – 7448828501, மதுரை – 9445029542.
இக்கூட்டத்தில் அரசு முதன்மைச் செயலாளர் கே.மணிவாசன், இ.ஆ.ப., ஆணையர் எஸ்.மதுமதி,இ.ஆ.ப., தாட்கோ மேலாண்மை இயக்குநர் கே.விவேகானந்தன், இ.ஆ.ப., இணை இயக்குநர்சு.பழனிசாமி,இ.ஆ.ப.,
சென்னை மாவட்ட ஆட்சியர் முனைவர்.ஜெ.விஜயா ராணி,இ.ஆ.ப., பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் ராகுல்,இ.வ.ப., தாட்கோ பொது மேலாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.