தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில், 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அதனையடுத்து சசிகலா ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாக உள்ள நிலையில், தமிழக அரசியலில் சசிகலாவின் வருகையை முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. ஜனவரி 26ஆம் தேதி பெங்களூர் செல்ல திட்டமிட்டிருக்கும் அமமுகவினர் பிரமாண்ட வரவேற்பளிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு சில தினங்களுக்கு முன்பு தான் காய்ச்சல் இருந்துள்ளது. இன்று திடீர் மூச்சுதிணறலும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவ குழுவினர் சிறை வளாகத்தில் சிகிச்சையளித்த நிலையில், மேல் சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவுள்ளார்.இது குறித்து விரிவான மருத்துவ அறிக்கை விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.