தமிழகம்

யூ-டியூப் பார்த்து பிரசவம்… குழந்தை, தாய்க்கு நேர்ந்த பரிதாப நிலை!

Child Birth
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள நெடுமுடி கிராமத்தைச் சேர்ந்த எண்ணெய் வியாபாரி லோகநாதன், இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், கோமதி கர்ப்பமாக இருந்துள்ளார். கடந்த 13ம் தேதி கோமதி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அன்று குழந்தை பிறக்கவில்லை. எனவே வீட்டிற்கு திரும்பி வந்த நிலையில், நேற்று திடீரென கோமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

ALSO READ  அப்பாவான குஷியில் மஹத்….!!!

தனது மனைவிக்கு தானே பிரசவம் பார்ப்பது என முடிவெடுத்த லோகநாதன், யூ-டியூப் பார்த்து, அக்கா கீதாவின் உதவியுடன் பிரசவம் பார்த்துள்ளார். இதில் கடும் போராட்டத்திற்கு பிறகு கோமதிக்கு ஆண் குழந்தை இறந்தே பிறந்துள்ளது. தொடர்ந்து அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதை அடுத்து கோமதியின் உடல் நிலை கவலைக்கியுள்ளது. எனவே முதற்கட்டமாக புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட கோமதி, அங்கு முதலுதவி செய்யப்பட்டு, மேற்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பேராசிரியர் பால் சந்திரமோகன் மீதான பாலியல் புகார்; புகார் அளிக்க அஞ்சும் மாணவிகள் ..!

News Editor

கொரோனாவால் உயிரிழந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்…

naveen santhakumar

உள்ளாட்சி தேர்தல்; தேர்தல் அதிகாரிக்கு மிரட்டல் – 4 பேர் கைது

naveen santhakumar